search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூன்றாம் பாலினத்தவர்"

    • மூன்றாம் பாலினத்தவர்கள் தங்கள் பாலினத்தை ஆணாகவோ, பெண்ணாகவோ தேர்வு செய்து கொள்ளலாம்
    • பழங்குடியின விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு சலுகை வழங்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு, அதுபோன்ற எந்த சலுகையும் வழங்கப்படவில்லை.

    சென்னை:

    மூன்றாம் பாலினத்தவர்களான கிரேஸ் பானு மற்றும் ரிஸ்வான் பாரதி ஆகியோர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "தமிழகத்தில் காவல் துறையில் காலியாக உள்ள 615 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மே 5-ந்தேதி அறிவிப்பு வெளியிட்டது.

    அந்த அறிவிப்பில், மூன்றாம் பாலினத்தவர்கள் தங்கள் பாலினத்தை ஆணாகவோ, பெண்ணாகவோ தேர்வு செய்து கொள்ளலாம் எனவும், பெண்ணாக தேர்வு செய்தவர்களுக்கு மகளிருக்கான 30 சதவீத இட ஒதுக்கீடு பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு சலுகை வழங்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு, அதுபோன்ற எந்த சலுகையும் வழங்கப்படவில்லை.

    அதேபோல உடற்தகுதித் தேர்விலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சலுகை வழங்கப்படாததால், தேர்வு அறிவிப்பாணையை ரத்து செய்து, மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் சலுகைகளை வழங்கி புதிய அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும்.

    மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    இந்த மனு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வயது வரம்பு சலுகையும், சிறப்பு இட ஒதுக்கீடும் வழங்க வேண்டும் என ஐகோர்ட்டு பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அந்த உத்தரவுகள் அனைத்தும் பரிந்துரைகள் போன்றவை எனத் தெரிவித்த நீதிபதிகள், மனுவுக்கு செப்டம்பர் 26-ந்தேதிக்குள் பதிலளிக்கும்படி அரசுக்கும், சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கும் உத்தரவிட்டனர்.

    பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நேற்று தொடங்கிய 10-வது தன்பால் ஈர்ப்பாளர்களுக்கான விளையாட்டு தொடரில் 91 நாடுகளைச் சேர்ந்த சுமார் 13 ஆயிரம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். #GayGames #LGBTQ
    பாரீஸ்:

    தன்பால் ஈர்ப்பாளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் ஆகியோர்கள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வு உண்டாக வேண்டும், அவர்கள் மீதான உளவியல் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தன்பால் ஈர்ப்பாளர்கள் விளையாட்டு தொடர் நடந்து வருகிறது.

    இந்நிலையில், 10-வது தன்பால் ஈர்ப்பாளர்கள் விளையாட்டு தொடர் (GayGames) பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று தொடங்கியது. 91 நாடுகளைச் சேர்ந்த சுமார் 13 ஆயிரம் விளையாட்டு வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்க உள்ளனர். சவுதி, ரஷியா, எகிப்து ஆகிய நாடுகளில் இருந்தும் அதிகமான வீரர்கள் இந்த தொடரில் கலந்து கொள்ள உள்ளனர்.



    நேற்று நடந்த தொடக்க விழாவில் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பல நாடுகள் தன்பால் ஈர்ப்பாளர்கள் திருமணத்தை அங்கீகரித்துள்ள நிலையில், அனைத்து நாடுகளும் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல நாடகங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தொடக்க விழாவில் நடத்தப்பட்டது.
    ×